Headlines
Admin-message

சுவாதியை கொன்ற கொடூரன் சிக்கினான்! தொடர்ந்து என்ன நடந்திருக்கும்?

Published by Shaila on  | 

பெண் பொறியாளர் சுவாதி கொலையில் செங்கோட்டையை சேர்ந்த ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் பெண் பொறியாளர் சுவாதி கடந்த 24-ம் தேதி வெட்டி கொலை செய்யப்பட்டார். அவரை கொன்ற மர்ம வாலிபர் தப்பி ஓடியிருந்தார்.

கடந்த ஒரு வார காலமாக கொலையாளியை கண்டுபிடிக்க முடியாமல் பொலிஸார் தடுமாறி வந்தனர். இந்நிலையில் சுவாதியை கொலை செய்ததாக திருநெல்வேலியில் ராம்குமார் என்பவரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.



இது குறித்து மேலும் தெரியவருகையில்,

ராம்குமார் செங்கோட்டை அருகிலுள்ள மீனாட்சிபுத்தை அடுத்த பன்பொழி கிராமத்தை சேர்ந்தவர். ஆலங்குளம் பொறியியல் கல்லூரியில் பி,இ., படித்தவர்.

வேலை தேடி சென்னை சென்ற ராம்குமார், சூளைமேட்டிலுள்ள மேன்ஷன் ஒன்றில் வாடகைக்கு ரூம் எடுத்து தங்கியுள்ளான். அப்போது சுவாதியுடன் ராம்குமாருக்கு ஒருதலைக்காதல் ஏற்பட்டுள்ளது.

ராம்குமார் 3 மாதமாக முயற்சித்தும் தனது காதலை சுவாதி ஏற்காததால், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து அரிவாளால் வெட்டி கொடூரமாக கொன்றுள்ளான்.
 
சுவாதி கொலை செய்ததை ராம்குமார் ஒப்புக்கொண்டுள்ளார்.

ராம்குமார் கைது செய்யப்பட்டது எப்படி? 
 
இந்த வழக்கில் நீதிமன்றம் தலையிட்டு குற்றவாளியை விரைவாக கைது செய்ய நெருக்கடி கொடுத்தது. இதனால் குற்றவாளியை விரைவாக கைது செய்ய 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

சுவாதியுடன் வேலை பார்த்தவர்கள், அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உட்பட 100 பேருக்கு அதிகமானோரிடம் பொலிஸார் விசாரணை நடத்தினார்கள். ஆனாலும் எந்த துப்பும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், கொலை செய்யப்பட்ட சுவாதியின் மொபைல் போனை கொலையாளி சம்பவ இடத்திலிருந்து எடுத்து சென்றுள்ளான்.
இதனையறிந்த பொலிஸார், சுவாதியின் நண்பர் ஒருவரின் எண்ணிலிருந்து சுவாதியின் மொபைலுக்கு எஸ்.எம்.எஸ்., ஒன்றை உடனடியாக அனுப்பியுள்ளனர்.

கொலை நடந்த நாளன்று காலை 8 மணி முதல் 8.10 மணி வரை சுவாதியின் மொபைல் போனை கொலையாளி ஆன் செய்து வைத்துள்ளான். அப்போது எஸ்.எம்.எஸ்., டெலிவரி ஆகியுள்ளது. 

இதனை வைத்து ஆய்வு செய்த பொலிஸார், செல்போன் சிக்னல் சூளைமேடு பகுதியில் இருந்ததை கண்டறிந்தனர்.

இதனையடுத்து ஒரு தனிப்படை பொலிஸார் கணினி மூலம் வரையப்பட குற்றவாளியின் புகைப்படத்தை கொண்டு சூளைமேடு பகுதியில் வீடு வீடாக சென்று விசாரணை மேற்கொண்டார்கள்.

இதில் சுவாதியின் வீடு அருகில் இருக்கும் மேன்சன் ஒன்றின் வாட்ச்மேனிடம் பொலிஸார் நேற்று விசாரித்ததில், மேன்சனில் தங்கியிருந்த இளைஞர் ஒருவர் ஒருவாரமாக அறைக்கு வரவில்லை என்ற தகவல் கிடைத்தது.

இதனை அடுத்து அவரது அறையின் பூட்டை உடைத்து பொலிஸார் சோதனை நடத்தினார்கள். அறையில் அவரது வீட்டு முகவரி உட்பட இளைஞரை பற்றி கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளது.

இதனை அடுத்து நேற்று இரவு 12 மணியளவில் செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் ராம்குமாரை அவரது வீட்டில் வைத்து பொலிஸார் கைது செய்தனர்.

கொலை நடந்த போது அணிந்திருந்த இரத்தக்கறை படிந்த சட்டையை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸார் தன்னை கைது செய்து விடுவார்கள் என்று தெரிந்ததும் ராம்குமார் தனது கையில் வைத்திருந்த பிளேட்டினால் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனை அடுத்து உடனடியாக அவரை மீனாட்சிபுரம் அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்துள்ளனர்.

பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ராம்குமாரின் கழுத்தில் எக்ஸ்ரே எடுக்கப்பட்ட பின், அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப்பின் ராம் குமார் பேச ஆரம்பித்தான். அவனிடம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராம்குமாரின் தந்தை பரமசிவம் , தாய் மற்றும் தங்கை மற்றும் சகோதரர் ஆகிய நால்வரிடமும் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் இந்த கொலையில் ராம்குமாருக்கு அவரது நண்பர் ஒருவர் உதவி செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.

சூளைமேட்டில் ராம்குமார் தங்கியிருந்த மேன்ஷனிலும் விசாரணை நடைபெற்று வருகிறமை குறிப்பிடத்தக்கது.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top