Headlines
Admin-message

ஜனாதிபதியினால் விருது பெற்ற கல்மடு மகாவித்தியாலய ஆசிரியருக்கு பாடசாலை சமூகம் கௌரவிப்பு

Published by Shaila on  | 

2016ஆம் ஆண்டின் சிறந்த ஆசிரியருக்கான "பிரதிபா பிரபா" விருது கடந்த 5ஆம் திகதி வழங்கப்பட்டது.

இந்த விருது கொழுப்பு தாமரை தடாக கலையரங்கில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்டது.

இதன்போது வவுனியா கல்மடு மகா வித்தியாலயத்தில்  நீண்டகாலமாக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிக் கொண்டிருக்கும் தமிழ் பாட ஆசிரியர் திரு . புண்ணியமூர்த்தி ஸ்ரீசங்கர் அவர்களுக்கும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மற்றும் அமைச்சின் செயலாளர் சுனில் கெட்டியாராச்சி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதனடிப்படையில் குறித்த ஆசிரியரை கௌரவிக்கும் முகமாக 2013ஆம் மற்றும் 2016ஆம் ஆண்டு உயர்தர மாணவர்களும் இணைந்து நேற்றைய தினம் விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த விழாவில் கல்மடு கிராமத்திற்கு பெருமை தேடித்தந்த ஆசிரியர் புண்ணியமூர்த்தி ஸ்ரீசங்கர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

அத்துடன் வாழ்த்து மடல்களும் நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இந்த விழாவில் வட மாகாணசபை உறுப்பினர் இந்திரராசா,பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள்,பெற்றோர்கள்,பழய மாணவர்கள் மற்றும் மாணவர்களும் கலந்துகொண்டனர்..




இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top