Headlines
Admin-message

ஐந்தாவது நாளாகவும் போராடும் ஆயுர்வேத ஊழியர்கள்

Published by Shaila on  | 


ஆயுர்வேத ஊழியர்கள் தொடர்ந்தும் போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், அதன் தொடர்ச்சியாக இன்றும் ஐந்தாவது நாளாக தமது போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள்.

இராஜகிரிய ஆயுர்வேத வைத்தியசாலை முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

முக்கியமாக இவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கொடுப்பனவுகள் பற்றியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது. கடந்த வருடம் ஜூன் மாதம் 1000 ரூபாய் மேலதிக கொப்பனவு தருவதாக கூறி நடாத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் பின்னர் அதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டது. ஆனால் குறித்த கொடுப்பனவு இதுவரை வழங்கப்படவில்லை என தெரிவித்தார்.

மேலும், எமது நிலுவையில் இருக்கக்கூடிய கொடுப்பனவுகளைக் கூட இந்த அரசு இன்னும் வழங்கவில்லை, நாம் தொடர்ந்தும் ஐந்தாவது நாளாகவும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம், ஆனால் இதுவரை எந்த அரச அதிகாரியோ அல்லது அமைச்சரோ இது தொடர்பில் உரிய தீர்வினை பெற்றுத் தரவில்லை என குற்றம் சுமத்தினார்.

பல வருடங்களாக நிலுவையில் இருக்கும் எனது கொடுப்பனவுகள் கொடுக்கப்படும் வரை தாம் இந்த போராட்டத்தை முன்னெடுப்பதாகவும் இதன்போது ஆயுர்வேத பணியாளர் சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த குருகே தெரிவித்தார்.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top