Headlines
Admin-message

பதுளையில் பஸ் விபத்து - 28 பேர் படுகாயம்

Published by Shaila on  | 


பதுளை - கலவுட பிரதான வீதியில் உள்ள போகஸ்தென்ன பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்து இன்று இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை இவ்விபத்தில் 26 பயணிகள், பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துனர் படுகாயத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

படுகாயத்திற்குட்பட்டவர்களை கண்டேகெதர வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும், கவலைக்கிடமான நிலையில் உள்ள 15 பேரை பதுளை வைத்தியசாலைக்கு இடமாற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தாம் முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top