Headlines
Admin-message

தேன் எடுக்கச் சென்றவரை கடித்து குதறிய கரடி!

Published by Shaila on  | 


மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹாவலி கங்கைக் காட்டுப்பகுதிக்கு தேன் எடுக்கச் சென்ற நபர், கரடி தாக்குதலுக்குள்ளான நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பட்டாளி புரத்தைச் சேர்ந்த ஐந்து பேர், நேற்று (01), மஹாவலி கங்கை பகுதியிலுள்ள காட்டுப்பகுதிக்கு தேன் எடுப்பதற்காகச் சென்றுள்ளனர். 

இதன்போது, தோப்பூர் பட்டாளிபுரத்தைச் சேர்ந்த 45 வயதுடைய சி. இராசரத்தினம் என்ற நபரே இவ்வாறு கரடியின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

எனினும் இவரை கரடியிடமிருந்து காப்பாற்றிய மற்றையவர்கள் அவரை தோப்பூர் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

மேலும் குறித்த நபரை மேலதிக சிகிச்சைகளுக்காக தோப்பூர் வைத்தியசாலையிலிருந்து திருகோணமலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top