பட்டாளி புரத்தைச் சேர்ந்த ஐந்து பேர், நேற்று (01), மஹாவலி கங்கை பகுதியிலுள்ள காட்டுப்பகுதிக்கு தேன் எடுப்பதற்காகச் சென்றுள்ளனர்.
இதன்போது, தோப்பூர் பட்டாளிபுரத்தைச் சேர்ந்த 45 வயதுடைய சி. இராசரத்தினம் என்ற நபரே இவ்வாறு கரடியின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
எனினும் இவரை கரடியிடமிருந்து காப்பாற்றிய மற்றையவர்கள் அவரை தோப்பூர் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
மேலும் குறித்த நபரை மேலதிக சிகிச்சைகளுக்காக தோப்பூர் வைத்தியசாலையிலிருந்து திருகோணமலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
