Headlines
Admin-message

திருமணத்தில் இணைய இருந்தவர்கள் மரணத்தில் இணைந்தார்கள்

Published by Shaila on  | 


அநுராதபுரத்தைச் சேர்ந்த 21 வயதான ருவான் குமார என்ற இளைஞனும், பொலன்னறுவையைச் சேர்ந்த 19 வயதான அயேஷா என்ற யுவதியும், அநுராதபுரம், புதபிம மஹாபுலன்குளப் பகுதியில் உள்ள ஆற்றிலிருந்து இன்று திங்கட்கிழமை (27) சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

காதலித்து வீட்டை விட்டு வெளியேறிய இவர்கள், இருவரையும் வீட்டினர் சாமாதனப்படுத்தி திருமண பேச்சுக்களை முடித்துள்ளனர்.

நாளை செவ்வாய்க்கிழமை (28) திருமண பந்தத்தில் இணைந்து கொள்ளவிருந்த வேலை இவர்கள் அனுராதபுர சிறிய குளம் ஒன்றில் குளிக்க சென்றுள்ளனர்.

பின்னர் தாமரை பறிக்கும் தோணி ஒன்றில் ஏறி குளத்தை சுற்றி வந்துள்ளனர். குளத்தின் நடுப்பகுதியில் வைத்து அந்த தோணி புரண்டுள்ளது இருவரும் நீரில் விழுந்துள்ளனர்.

அதனை கரையில் இருந்து அவதானித்த சிறுவர்கள் இவர்கள் விளையாட்டுக்கு இவ்வாறு செய்கிறார்கள் என நினைத்து உதவிக்கு யாரையும் அழைத்தில்லை.

இன்று குளத்தில் மூழ்கிய இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top