Headlines
Admin-message

விரைவில் சிக்குவான் சுவாதியை கொலை செய்தவன்

Published by Shaila on  | 


சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24ந் தேதி காலையில் கம்யூட்டர் பெண் என்ஜினீயர் சுவாதியை மர்ம ஆசாமி ஒருவர் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தார்.

ரயில் நிலையத்தில் கண்காணிப்பு கமரா எதுவும் இல்லாததால், கொலையாளியை பற்றிய எந்த துப்பும் கிடைக்கவில்லை.

ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள ஒரு வீட்டில் பதிவான கண்காணிப்பு கமரா காட்சிகளை அன்று (24–ந் தேதி) மாலையிலேயே பொலிஸார் வெளியிட்டனர்.

இந்த நிலையில், நேற்று இந்த கொலை சம்பவம் தொடர்பாக புதிய வீடியோ காட்சி ஆதாரத்தை பொலிஸார் அதிகாரபூர்வமாக வெளியிட்டனர்.

அந்த காட்சியில் இடம்பெற்றிருக்கும் நபரும், கடந்த 24–ந் தேதி பொலிஸார் வெளியிட்ட சந்தேகப்படக்கூடிய நபரின் உருவப்படமும் ஒத்துப்போகிறது.

கண்காணிப்பு கமராவில் பதிவான காட்சிகளில் வந்த சந்தேகப்படக்கூடிய மர்மநபரின் உருவப்படத்தை தனியாக எடுத்து அதை பெரிதாக்கி அவரை அடையாளம் தெரிகிற வகையில் படத்தை பொலிஸார் தயார் செய்து விட்டதாகவும், இன்னும் 4 நாட்களில் அவனை பிடித்து விடுவோம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top