Headlines
Admin-message

இரு உயிரை வயிற்றில் சுமந்த நிறைமாத கர்ப்பிணி விபத்தில் பலி

Published by Shaila on  | 


கடந்த பொசன் பௌர்ணமி தினத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரட்டை குழந்தைகளை வயிற்றில் சுமந்த நிறைமாத கர்ப்பிணி பெண்ணுடன் குழந்தைகளும் பலியான துயரமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் அம்பாறை தெய்யத்தகண்டிய பிரதேசத்தில்கடந்த 19 ஆம் திகதி ஞாயிற்று கிழமை இடம்பெற்றுள்ளது.

கணவரும், ஏழு மாத கர்ப்பிணி பெண்ணும் தான சாலையில் உணவு உண்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். வேகமாக வந்த முச்சக்கர வண்டி ஒன்று மோட்டார் சைக்கிளை மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்தில் காயமடைந்த கர்ப்பிணி பெண்ணையும் அவர் வயிற்றில் இருந்த இரட்டை குழந்தைகளையும் காப்பற்ற தெய்யத்தகண்டிய வைத்தியசாலையின் மருத்துவர்கள், தாதியர் உட்பட ஊழியர்கள் கடும் முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் இவர்களை காப்பற்ற முடிய வில்லை.

இதேவேளை, தப்பிச் சென்ற முச்சக்கர வண்டி சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top