கடத்தப்பட்ட நபர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, வெள்ளை வான் ஒன்றில் வந்த சிலர் நேற்றிரவு கடத்திச் சென்றதாக கடத்தப்பட்டவரின் உறவினர் ஒருவர் கூறியுள்ளார்.
வெவேல்தெனிய - பஹாலகம பிரதேசத்தை சேர்ந்த 38 வயதான திஸ்ஸ குமார செனவிரட்ன என்ற நபரே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
காணாமல் போயுள்ள நபரின் தாய் மீரிகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார். கடத்தல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
காணாமல் போயுள்ள நபர் கொள்ளை உட்பட குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்டவர் என மீரிகம பொலிஸ் நிலையத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
