Headlines
Admin-message

யாழிலுள்ள ஜனாதிபதி மாளிகை தற்போது வடமாகாண சபையிடம்

Published by Shaila on  | 


யாழ்.வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட காங்கேசன்துறை - கீரிமலை பகுதியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அமைத்த சொகுசு மாளிகையை வடமாகாணசபைக்கு வழங்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை கோரும் பிரேரணை வடமாகாணசபையில் எடுக்கப்பட்டு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

மாகாணசபையின் 54ம் அமர்வு இன்றைய தினம் நடைபெற்றிருந்த நிலையில் மேற்படி சொகுசுமாளிகையை வடமாகாணசபைக்கு வழங்குமாறு கோரும் பிரேரணையினை அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் சபையில் முன்மொழிந்தார்.

குறித்த பிரேரணையினை சபையில்முன்மொழிந்து அவர் உரையாற்றுகையில் மாகாணசபையின் வதிவிட முகாமைத்துவ பயிற்சி நெறிகளை நடத்துவதற்கும், மாகாணத்திற்கு வருகை தரும் வெளிநாட்டு இராஜதந்திரிகள் தங்குவதற்கும், மாநாடுகளை நடத்துவதற்கும் பொருத்தமான கட்டிடங்கள் இல்லை.

இந்நிலையில் மேற்படி மாளிகை கட்டிடத்தை மாகாணசபைக்கு வழங்குமாறு ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை கோருவதாக கூறினார்.

மேலும் இந்த விடயத்தை யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முன்வைத்ததாகவும், அதற்கமைய முதலமைச்சர் தமக்கு முறைப்படியா கவிடயத்தை தருமாறும் கேட்டதற்கிணங்க இந்த பிரேரணையை தாம் முன்மொழிவதாக குறிப்பிட்டார்.

இந்நிலையில் குறித்த பிரேரணை தொடர்பாக கருத்து தெரிவித்த முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆட்சிமாற்றத்தின் பின்னர்ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறித்த மாளிகையை பார்க்க வந்தபோது அதனை தாமும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் வடமாகாணசபைக்கு வழங்குங்கள் என ஜனாதிபதியிடம் கேட்டதற்கு குறித்த மாளிகையின் வேலைகள் முடிந்த பின் தருகிறேன்.என கூறினார் என கூறிய முதலமைச்சர் அதனை யாழ்.பல்கலைக்கழகமும் கேட்டிருக்கும் நிலையில் நாம் கேட்பது பொருத்தமானது என்றார்.

இந்நிலையில் குறித்த பிரேரணை சபையில்எந்தவித எதிர்ப்புக்களும் இல்லாமல் நிறைவேறியுள்ளது.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top