Headlines
Admin-message

நடுகடலில் தத்தளித்த இலங்கை அகதிகள் - காப்பாற்றிய மீனவர்கள்

Published by Shaila on  | 

இந்தியாவின் கோடியக்கரை கடலில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிறுமியொருவர் உள்ளிட்ட மூன்று இலங்கை தமிழர்கள் அந்த நாட்டு மீனவர்களினால் மீட்கப்பட்டுள்ளனர்.

இவர்களை தமிழகத்தின் நாகப்பட்டினம் மீனவ குழுவொன்று மீட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

வவுனியாவைச் சேர்ந்த 27 வயதான துஷ்யந்த், 24 வயதுடைய துவாரகா மற்றும் இரண்டு வயதுடைய காகிதா ஆகியோரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர்.

சில நாட்களாக கடலில் உணவு எதுவுமின்றி தத்தளித்துக் கொண்டிருந்த இலங்கையர்களுக்கு முதலுதவி வழங்கப்பட்டதுடன், அவர்களுக்கு தேவையான உணவும் வழங்கப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் குறிப்பிடுகின்றன.

குறித்த மூன்று பேரும் சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top