சாவஸ்திபுர பகுதியைச் சேர்ந்த 26 வயதான குறித்த சந்தேகநபரை, கந்தளாய் குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இந்த நபர் ஜனாதிபதி செயலகத்தில் திட்டப் பணிப்பாளராக கடமையாற்றுவதாக தெரிவித்தே நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.
கந்தளாய் பகுதியிலுள்ள இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்களை பெற்றுக் கொடுப்பதாக கூறி குறித்த நபர் ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபா நிதி மோசடி செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
