சிறுநீரக நோயிற்கு பிரதான காரணம் சுத்தமற்ற குடிநீர் என்பதால், இந்த குடிநீர்பிரச்சினையை ஒருவருடத்திற்குள் முற்றாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் குறித்த குடிநீர் பிரச்சினைக்கு சர்வதேச அளவில் ஒத்துழைப்புகள் கிடைப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா - கெலேபோகஸ்வௌ பிரதேசத்தில் சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் அமைக்கப்பட்ட புதிய நீர் வடிகட்டும் இயந்திரத்தை நேற்றைய தினம் திறந்து வைத்து உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
