Headlines
Admin-message

செவ்வாய்க் கிழமைக்குள் சாலாவ முகாம் பிரச்சினை தீரும்

Published by Shaila on  | 


கொஸ்கம - சலாவ இராணுவ முகாமிலுள்ள ஆயுதக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தினால் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டவர்களுக்கு எதிர்வரும் செவ்வாய்க் கிழமை இழப்பீடு வழங்கப்படும் என்று அரச தகவல் திணைக்களம் கூறியுள்ளது.

அனர்தத்திற்கு முகங்கொடுத்த மக்களின் பிரச்சினைகளை கண்டறிவதற்காக 12 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

அந்த ஒவ்வொரு குழுவிலும் பிரதேச அபிவிருத்தி அதிகாரிகள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், இராணுவ அதிகாரி, பொலிஸ் அதிகாரி, மற்றும் சிவில் பிரதிநிதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

கொஸ்கம - சலாவ இராணுவ முகாமிலுள்ள ஆயுதக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தினால் பிரதேசத்தில் உள்ள 654 கட்டிடங்கள் பகுதியளவிலும் முழுமையாகவும் சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top