Headlines
Admin-message

ஜனாதிபதி மாளிகையை பார்வையிட திரளும் மக்கள்

Published by Shaila on  | 


ஜனாதிபதி மாளிகையை இதுவரை 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்.

குறிப்பாக இன்று மாத்திரம் 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வருகை தந்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கமைய கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையானது வரலாற்றில் முதற் தடவையாக கடந்த 8 ஆம் திகதி முதல் மக்களின் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டது.

மூன்றாவது நாளாகிய இன்று பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 15 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் வருகை தந்துள்ளனர்.

மேலும், இதுவரை 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் நாடளாவிய ரீதியில் இருந்து வந்து பார்வையிட்டுச் சென்றுள்ளனர்.

ஜனாதிபதி மாளிகையானது 29 ஆளுநர்கள் மற்றும் 6 ஜனாதிபதிகள் தமது அலுவலக பணிகளுக்காகவும் தங்களின் வாசஸ்தலமாகவும் பயன்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top