Headlines
Admin-message

புலம்பெயர் நாடுகளில் புலிகளின் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன

Published by Shaila on  | 


வடக்கிலிருந்து படைமுகாம்களை அகற்றுவதற்கு இடமளிக்கக் கூடாது. புலிகள் தோல்வி கண்டு விட்டார்கள். ஆனால் பிரிவினைவாதம் இன்னமும் தோல்வி காணவில்லை என்று மஹிந்த ஆதரவு அணி எம்.பி.யான உதய கம்மன்பில தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வடக்கு,கிழக்கு நிலைமைகள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்த சபை ஒத்திவைப்பு பிரேரணை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே உதயகம்மன்பில இவ்வாறு தெரிவித்தார்.

சபையில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

வடக்கில் தான் இலங்கையில் அதிகளவு காணிகள் உள்ளன. எனவே வடக்கிலுள்ள படைமுகாம்களை அகற்றி விட்டு அங்கு ஆரம்பகாலத்தில் வாழ்ந்தவர்களுக்கு காணிகளை வழங்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் கேட்பது நியாயமற்ற கோரிக்கையாகும்.

அரசின் அபிவிருத்திப் பணிகள், பாதுகாப்பு விடயங்களுக்காக தனியார் காணிகள் கையகப்படுத்தப்படும் போது அதற்கு பதிலாக மாற்றுக் காணிகள் வழங்கப்படும். இது தான் நடைமுறை.இதனை மீறி செயற்பட முடியாது.

வடக்கிலிருந்து இராணுவம் முழுமையாக வெளியேற்றப்பட வேண்டும் என முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறியுள்ளார். இவ்வாறு அனைத்து முதலமைச்சர்களும் கோரிக்கை விடுத்தால் என்ன நடக்கும்.

புலிகள் தோல்வி கண்டு விட்டார்கள். ஆனால் பிரிவினைவாதம் இன்னமும் தோல்வி காணவில்லை.இது தான் கசப்பான உண்மை. புலம்பெயர் நாடுகளில் புலிகளின் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன என அமெரிக்கா தெரிவித்துள்ளது என்றார்.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top