இந்த நிலைமையானது சமூக பிரச்சினையாக மாறி, சிறுவர்களின் அழகான இளம் பராயம் மேற்படி ஆபந்தான நிலைமையில் அழிந்து போவதாக அதிகார சபையின் தலைவர் கலாநிதி நடாஷா பாலேந்திர தெரிவித்துள்ளார்.
சிறுவர் தொழிலாளர்களாக பயன்படுத்துவதற்கு எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனை கூறியுள்ளார்.
இந்த தினத்தை முன்னிட்டு மூன்று கட்ட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளன.
இதனடிப்படையில், சிறுவர்களை பாலியல் தொழிலாளிகளாக பயன்படுத்துவதை தடுப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடும் மாநாடு, ஆய்வு மற்றும் சிறுவர்களை பாலியல் தொழிலாளிகளாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்கான பரிந்துரைகளை முன்வைக்க தேசிய மாநாடு ஒன்றை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக நடாஷா பாலேந்திர தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
