Headlines
Admin-message

ஐந்து மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர்! தொடர்ந்து கிடைக்கும் முறைப்பாடுகள்

Published by Shaila on  | 


திருகோணமலை – புல்மோட்டை பிரதேசத்திலுள்ள சிங்கள பாடசாலை ஒன்றில் ஐந்து மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் ஆசிரியரை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு குச்சவெளி சுற்றுலா நீதிமன்ற நீதவான் பெர்ணான்டோ நேற்று (08) உத்தரவிட்டுள்ளார்.

புல்மோட்டை பிரதேசத்தின் பாடசாலை ஒன்றில் 14 மற்றும் 15 வயது மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக, பெற்றோர்கள் மூலம் மாணவர்கள் புல்மோட்டை பொலிஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் (07) முறைப்பாடு செய்திருந்தனர்.

குறித்த முறைப்பாட்டினையடுத்து பொத்துவில் பகுதியைச் சேர்ந்த ஜானதிலக கருணாசேன (40 வயது) என்ற ஆசிரியரை கைது செய்து விசாரணை நடாத்தப்பட்டுள்ளது.

குறித்த ஆசிரியருக்கெதிராக இதுவரை 05 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், இன்னும் சில மாணவர்கள் பெற்றோர்கள் ஊடாக முறைப்பாடுகளை வழங்கி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top