குறித்த சம்பவம் இன்று கொழும்பிலிருந்து வத்தளைக்கு செல்லும் பிரதான வீதியில் நடந்துள்ளது.
இதனால் கொழும்பை அண்மித்த பகுதியில் பெரும் வாகனநெரிசல் காணப்பட்டதோடு, போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை சற்று பாதிக்கப்பட்டுள்ளது.
வீதியின் குறுக்கே நின்ற உயிரினத்தை விரட்டும் முயற்சியில் பிரதேச மக்கள் ஈடுபட்டுள்ளதுடன், சிலர் குறித்த பாதையில் பயணிப்பதற்கு அச்சப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நாட்டில் அடிக்கடி மழை பெய்துவருவதால் முதலை, பாம்பு, உடும்பு போன்ற ஊர்வன மக்களின் இருப்பிடத்தை நோக்கி படையெடுத்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.
