பாதிக்கப்பட்ட பெண்னை அண்டை வீட்டார் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் பெண்ணின் உடல்நிலை மிக மோசமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவத்தை தொடர்ந்து கணவர், மாமியார் உட்பட ஐந்து பேர் மீது பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகாரில், குடும்பத்தில் நடக்கும் சிறிய சிறிய பிரச்சனைகளுக்கு அப்பெண்னை, மாமியார் அடித்து துன்புறுத்தி வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து வழக்கு பதிவு செய்த பொலிசார், பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் மற்றும் மாமியாரை கைது செய்துள்ளனர்.
