Headlines
Admin-message

கிழக்கு பல்கலை மாணவன் தாக்கப்பட்டமைக்கு தமிழ் சிவில் சமூக அமைப்பு கண்டனம்

Published by Shaila on  | 


கிழக்கு பல்கலைக்கழக மாணவன் இலட்சிய மூர்த்தி சுமேஸ்காந் சிங்கள மாணவர்களினால் தாக்கப்பட்டமைக்கு தமிழ் சிவில் சமூக அமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது.

தமிழ் மாணவர்கள் சிங்கள மாணவர்களினால் தாக்கப்படுகின்றமை இத்துடன் ஆறாவது தடவை என இந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

மாணவன் சுமேஸ்காந் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் சிவில் சமூக அமைப்பு கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மே 18 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தலை முன்னின்று நடத்தினார் எனவும், இறந்தவர்களுக்கு தனது முகப்புத்தக்கத்தில் மரியாதையை அளித்தார் எனவும் கடந்த மே மாதம் 25 ஆம் திகதி குறித்த மாணவன் சக சிங்கள மாணர்களால் தாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top