Headlines
Admin-message

ஜனாதிபதி பிரதமர் தலைமையில் 6ம் திகதி ஆளும் கட்சியின் கூட்டம்!

Published by Shaila on  | 


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தலைமையில் ஆளும் கட்சியின் கூட்டம் எதிர்வரும் 6ம் திகதி நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி காரியாலயத்தில் இந்தக் கூட்டத்தை நடாத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானமொன்றை கூட்டு எதிர்க்கட்சி கொண்டுவர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஆளும் கட்சியின் கூட்டத்தில் ஜனாதிபதியும் பங்கேற்க உள்ளார். பொதுவாக ஆளும் கட்சிக் கூட்டம் நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் பிரதமர் தலைமையிலேயே நடத்தப்படும்.

எனினும் இம்முறை ஜனாதிபதி தலைமையில் 6ம் திகதி மாலை 6 மணிக்கு ஆளும் கட்சியின் கூட்டம் நடத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top