Headlines
Admin-message

சுவிஸ்குமார் எவ்வாறு கொழும்புக்கு தப்பிச் சென்றார்?

Published by Shaila on  | 


புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் முக்கிய சந்தேகநபரான சுவிஸ் குமார் என்றழைக்கப்படும் மகாலிங்கம் சசிகுமார் எவ்வாறு கொழும்புக்கு தப்பிச் சென்றார் என்பது தொடர்பிலான விசாரணை அறிக்கையை அடுத்த வழக்கு தவணையின் போது மன்றில் சமர்ப்பிப்பதாக குற்றப் புலனாய்வு பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் தொடர்ந்து 12 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை பதில் நீதவான் கருப்பையா ஜீவராணி உத்தரவிட்டார்.

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு நேற்று புதன்கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் பதில் நீதவான் கருப்பையா ஜீவராணி முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன்போது மாணவி கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 12 சந்தேகநபர்களும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

கடந்த வழக்கு தவணையின் போது நீதிமன்றினால் கோரப்பட்ட அறிக்கைகள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதனால் அடுத்த தவணையில் அறிக்கைகளை சமர்ப்பிப்பதாக குற்றத் தடுப்பு புலனாய்வு பிரிவு பொலிஸார் நீதவானிடம் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து 12 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை பதில் நீதவான் கருப்பையா ஜீவராணி உத்தரவிட்டார்.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top