Headlines
Admin-message

நாட்டை ஒன்றிணைத்த 8 தலைவர்களை விரலிட்டு எண்ணினார் கம்மன்பில

Published by Shaila on  | 


2600 வருட வரலாற்றை கொண்ட இலங்கையை ஒன்றிணைத்த 8 தலைவர்கள் உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த 8 தலைவர்களின் பெயர்களையும் உதய கம்மன்பில இதன்போது கூறியிருந்தார்.

01.துட்டகை முனு மன்னன்
02.வலகம்பா மன்னன்.
03.தாதுசேன மன்னன்.
04.முதலாவது விஜயபாகு மன்னன்.
05.முதலாவது பராக்கிரமபாகு மன்னன்
06.இரண்டாவது பராக்கிரமபாகு மன்னன்.
07.ஆறாவது பராக்கிரமபாகு மன்னன்.
08.மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதி

இந்த 8 தலைவர்களிலும் இன்று உயிருடன் வாழ்ந்துக் கொண்டிருக்கும் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ மாத்திரமே எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட வேண்டியது தேசிய பொறுப்பு என உதய கம்மன்பில இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார்

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top