Headlines
Admin-message

மண்சரிவு அபாயம் காரணமாக களுத்துறையில் 39 குடும்பங்கள் வெளியேற்றம்

Published by tamilkurall on  | 


களுத்துறை, நேபொட பிரதேசத்தில் மண்சரிவு அபாயம் காரணமாக 39 குடும்பங்கள் இடம்பெயர்க்கப்பட்டு, தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
களுத்துறை, நேபொட, ரன்னகல மற்றும் தெபுவன, மாபடவத்தை பிரதேசத்தில் வசித்தவர்களே இவ்வாறு இடம்பெயர்ந்துள்ளனர். தற்போது அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே இன்றைய தினமும் நாட்டின் பல பகுதிகளிலும் 75 மில்லி மீட்டர் அளவை விடவும் கூடிய கடும் மழை பெய்யக் கூடும் என்று வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.
குறிப்பாக மேல்மாகாணம், வடமேல், தெற்கு மற்றும் மத்திய, சப்ரகமுவ மாகாணங்களில் இன்று பிற்பகல் தொடக்கம் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top