Headlines
Admin-message

அனர்த்தங்களால் சப்ரகமுவ மாகாணத்தில் 12 மாணவர்கள் பலி

Published by Shaila on  | 


இயற்கை அனர்த்தத்தினால் சப்ரகமுவ மாகாணத்தில் பாடசாலை மாணவர்கள் 12 பேர் உயிரிழந்துள்ளதாக மாகாண கல்வி அமைச்சர் பானு முனிப்பிரிய  தெரிவித்துள்ளார்.

அத்துடன், 11 மாணவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சப்ரகமுவ மாகாண சபையில், சபை தலைவர் கஞ்சன ஜயரத்ன தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இயற்கை அனர்த்தம் காரணமாக கேகாலை மாவட்டமே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி பாதிக்கப்பட்ட மக்கள் கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களிலுள்ள 57 பாடசாலைகளில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை சப்ரகமுவ மாகாணத்தில் 63 பாடசாலைகள் மறு அறிவித்தல் வரையில் மூடப்பட்டுள்ளன.

அவற்றுள் 10 பாடசாலைகள் மண்சரிவு அபாய எச்சரிக்கைக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top