Headlines
Admin-message

மரக்கறிகளின் விலை 25 வீதத்தினால் உயர்வு

Published by tamilkurall on  | 


மரக்கறிகளின் விலை நூற்றுக்கு 25 வீதத்தினால் உயர்வடைந்துள்ளதாக தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் யு.ஆர்.தயானந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றுக்கு நேற்று அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்…
சீரற்ற காலநிலையினால் சந்தைக்கு கிடைக்கும் மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
பொருளாதார மத்திய நிலையத்திற்கு கிடைக்கும் மத்திய மலைநாட்டு மரக்கறி வகைகள் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.
அவ்வாறு கிடைக்கும் மரக்கறிகளும் பழுதடைந்த நிலையில் காணப்படுகின்றன.
சீரற்ற காலநிலையினால் மரக்கறி செய்கை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே எதிர்வரும் நட்களில் மரக்கறிகளின் விலை மேலும் உயர்வடையக் கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு கிலோ கறிமிளகாய் 230 ரூபாவிற்கும், ஒரு கிலோ பீட்ருட் 110 ரூபாவிற்கும், ஒரு கிலோ பச்சை மிளகாய் 200 ரூபாவிற்கும், ஒரு கிலோ தக்காளி 110 ரூபாவிற்கும், ஒரு கிலோ கரட் 100 ரூபாவிற்கும், ஒரு கிலோ கத்தரிக்காய் 100 ரூபாவிற்கும், ஒரு கிலோ கோவா 80 ரூபாவிற்கும், ஒரு கிலோ லீக்ஸ் 100 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top