Headlines
Admin-message

ஆம் இலங்கை இராணுவம் அட்டூழியம் செய்தது!- ஒப்புக்கொண்ட இலங்கை அமைச்சர்

Published by tamilkurall on  | 


அந்தப் பேரவலம் நடந்து ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், இன்னும் அந்தக் கதறல்கள், அழுகைச் சத்தம் நீதியின் பால் நம்பிக்கை கொண்ட ஒவ்வொருவரின் செவிகளிலும் கேட்டுக் கொண்டிருக்கிறது.
முத்துக்குமார் எரியூட்டப்பட்ட அன்று, மூலக்கொத்தளம் சுடுகாட்டிற்கு சென்றவர்களின் நாசியில் அந்த பிணவாடை இன்னமும் அடித்துக் கொண்டுதான் இருக்கிறது.
பலர் இன்னும் குற்ற உணர்வில் தான் நாட்களை கடத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த தீவு நாட்டிலும், ஆட்சி மாறினாலும், இன்னும் பாதிக்கப்பட்ட மக்களின் மனக் காயங்கள் ஆறவில்லை.
இன்றும், அம்மக்கள் உலக பொது சமூகத்திடம் நீதி வேண்டிதான் நின்று கொண்டிருக்கிறார்கள். அங்கு கடைசி போரின் போது இலங்கை இராணுவம் நிகழ்த்திய அட்டூழியங்கள் குறித்து சனல் 4, வீடியோ ஆதாரம் வெளியிட்டு இருந்த போதும், இத்தனை நாள் இலங்கை அரசு மெளனம் சாதித்தே வந்தது.
மெளனம் சாதித்து வந்தது மட்டுமல்லாமல், 'அந்த வீடியோ எதுவும் உண்மையல்ல. அது ஜோடிக்கப்பட்டது' என்றே மறுத்து வந்தது.
இத்தருணத்தில் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீர, முன்னாள் அதிபர் ராஜபக்சவிற்கு எழுதி உள்ள மனம் திறந்த கடிதம், அங்கு நடந்த போர் விதி மீறல்களை ஒப்புக் கொள்வது போல் அமைந்துள்ளது.
ஆம். அந்த சனல் 4 வீடியோவில் உள்ள அனைத்தும் உண்மை என்று ஒப்புக் கொண்டுள்ளது.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top