Headlines
Admin-message

இன அழிப்பிற்கு நீதிகோரி சுவிஸில் நினைவேந்தல் நிகழ்வு!

Published by tamilkurall on  | 


இலங்கை பயங்கரவாத அரசின் கட்டமைப்பு சார் தமிழினப் படுகொலையை சுவிஸ் சமூகத்திற்கு வெளிக்கொண்டுவரவும், முள்ளிவாய்க்கால் இன அழிப்பிற்கு நீதி வேண்டியும் முள்ளிவாய்க்கால் தின நினைவேந்தல் நிகழ்வு சுவிஸில் இடம்பெற்று வருகின்றது.
இந்த நிகழ்வு இன்று (18) சுவிஸ் நாடாளுமன்றத்திற்கு முன்பாக பிற்பகல் 2 மணியளவில் இருந்து இடம்பெற்று வருகின்றது.
குறித்த நிகழ்வை சுவிஸ் ஈழத்தமிழரவை, சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பு, சுவிஸ் தமிழ் பெண்கள் அமைப்பு, அக்கினிப் பறவைகள் அமைப்பு என்பன இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.
இந்த ஒன்றுகூடல் நிகழ்வில் கலந்துகொள்வோருக்கென வாகன ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, தொடர்புகொள்வதற்கான தொலைபேசி இலக்கங்களும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top