Headlines
Admin-message

கண்ணி வெடிகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் உதவ வேண்டும்! செல்வம் எம்.பி கோரிக்கை

Published by tamilkurall on  | 


வடக்கு, கிழக்கில் கண்ணிவெடிகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் உதவ வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்;
நாடாளுமன்றத்தில் இந்தக்கோரிக்கை இன்று விடுக்கப்பட்டது.
கண்ணிவெடிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணங்கள் கானல் நீராகவே இருந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
எனவே நல்லிணக்கம் மற்றும் சமாதானம் என்று கூறப்படுகின்ற நிலையில் இவர்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று செல்வம் கோரினார்.
இதேவேளை பதில் அதிபர்களை அதிபர்களாக நியமிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
தரங்களை பெற்றிருக்காத போதும் பாடசாலைகளில் பதில் அதிபர்களாக கடமையாற்றியவர்கள் அதிபர் நியமனங்களின் போது புறக்கணிக்கப்படுகின்றமை தவிர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top