கேகாலை அரநாயக்க பிரதேசத்தில் பாரியளவில் மண் சரிவு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அரநாயக்க சமாசாரா மலையின் எலங்கபிட்டிய பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மண்சரிவவில் சிக்கிய 80 பேர் இதுவரையில் மீட்கப்பட்டுள்ளதுடன் சம்பவத்தில் மேலும் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் சிக்கியிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த மீட்புப்பணியில் இராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

