அம்பகஸ்வேவ ஆற்றிற்கு ஆறு இளைஞர்களை கொண்ட குழு ஒன்று மீன் பிடிக்கசென்றுள்ளனர், இந்தநிலையில் ஒரு காட்டு யானை இவர்களை துரத்தியுள்ளது.
இந்தநிலையில் தங்களின் பாதுகாப்பிற்காக இவர்கள் ஆற்றில் குதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குழுவில் இருந்த இருவர் காணாமல் போயுள்ளதுடன், இவர்களின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எயிரிகோயா பகுதியை சேர்ந்த 17 மற்றும் 22 வயதுடைய இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் ஹபரணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

