உக்ரெய்னுடன் விரைவில் செய்து கொள்ளப்படவுள்ள உடன்படிக்கையின் கீழ் உதயங்கவை நாடு கடத்துமாறு பொலிஸார் உக்ரெய்ன் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்க முடியும்.
பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்காக வீரதுங்க, இலங்கையினால் தேடப்படும் ஒருவராக கருதப்படுகிறார்.
உக்ரெய்ன் தீவிரவாதிகளுடன் ஆயுதப் பரிமாறல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டும் இதில் ஒன்றாகும்
இதனையடுத்தே அவர் விசாரணைகளுக்கு அஞ்சி இலங்கைக்கு வர மறுத்து வருகிறார். இந்தநிலையில் குற்றங்களை கட்டுப்படுத்துவதற்காக உக்ரெய்னுடன் உடன்படிக்கையை செய்து கொள்ள கடந்த வாரம் அமைச்சரவை நீதியமைச்சுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

