இந்த தீர்ப்பு விரைவில் உலகத்திற்குத் தெரியவரும் என்று கூறிய வழக்கறிஞர் தடா சந்திரசேகர், தனிப்பட்ட முறையில் இலங்கை சென்று வடக்கில் போரினால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டுள்ளார்.
மேலும், புதுமாத்தளன், ஆனந்தபுரம், முள்ளிவாய்க்கால் ஆகிய பகுதிகளுக்குச் சென்று போரினால் கொல்லப்பட்ட போராளிகள், பொதுமக்கள் அனைவருக்கும் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்,
நான் பொதுமக்கள் சிலரிடம் கேட்டேன் எங்கள் தலைவர் பிரபாகரன் இருக்கிறாரா? இல்லையா? என்று. அவர்களில் பலர் இருக்கின்றார் என்று கூறினர். சிலர் மௌனமாக உள்ளனர்.
உலகத்தமிழரின் தலைவன் பிரபாகரன் இருந்தால் தலைவன், இறந்தால் இறைவன் என்றார்.

