உச்ச நீதிமன்றத்தின் ஊடாக கடந்த மூன்று மாதங்களுக்குள் 300 வழக்குகள் விரைவாக விசாரணை செய்யப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் தெரிவித்துள்ளார்.
யாழ் ஜெட்வின் ஹோட்டலில் தொழில் உறவுகள் அமைச்சின் பிரதி செயலாளர் சுனில் அபயவர்த்தன தலைமையில் தொழிலாளர்கள் நியாயசபையில் உள்ள மாற்றங்களும் சர்வதேச தொழிலாளர்களின் நிலையும் என்ற தலைப்பில் கருத்தரங்கு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்தக் கருத்தரங்கில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் வழக்குகளை துரிதமாக நிறைவு செய்வதற்கான பல கட்ட வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும் இப்போதுள்ள கால கட்டத்தில் பெருந்தொகையிலான வழக்குகள் முற்றுப் பெறாமல் உள்ளன. அவற்றை நிறைவு செய்வதற்கான பல வழிமுறைகளை எதிர்காலத்தில் செயற்படுத்த உள்ளதாகவும் மேலும் கூறியுள்ளார்.

