சொத்துக்கள் முடக்கப்பட்டமை மற்றும் சொத்துக்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளமை குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் இதற்கு உலக வங்கியின் ஒத்துழைப்பு நாடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஊழல் மோசடிகளை தடுத்து நிறுத்துவதற்கு உலக நாடுகளின் தலைவர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
உள்நாட்டு சட்டம் ஒழுங்குத்துறைகளை வலுப்படுத்துவதன் மூலம் இதற்கு காத்திரமான முறையில் பங்களிப்பினை வழங்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஊழல் மோசடிகளை இல்லாதொழிப்பதற்கு இலங்கை முழு அளவில் நடவடிக்கை எடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்

