Headlines
Admin-message

மஹிந்தவின் பாதுகாப்பு அதிகாரியின் சாரதி மீது பொலிஸார் தாக்குதல்

Published by tamilkurall on  | 


முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரி காமினி செனரத்தின் சாரதியான சரத் திஸாநாயக்க இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.
கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் அதிகாரிகள் தம்மை கடந்த வியாழக்கிழமையன்று கடத்திச் சென்று கடுமையாக தாக்கியதாக அவர் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக தமது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்சவின் அரசாங்க காலத்தின்போது மேற்கொள்ளப்பட்ட நிதிமோசடி விசாரணைகளுக்காக நிதிமோசடி தடுப்பு பொலிஸ் பிரிவுக்கு முக்கியமான சாட்சியாக சரத் திஸாநாயக்க கருதப்படுகிறார்.
இந்தநிலையில் நிதிமோசடி விசாரணையின் சாட்சியாளர் ஒருவர் வரலாற்றில் முதல் தடவையாக தாக்கப்பட்ட முக்கியமான சம்பவம் இதுவாக கருதப்படுவதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நிறைவேற்று பணிப்பாளர் ரஜித் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பாதுகாப்பு அதிகாரியாக செயற்பட்ட வேளையில் 2014ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 2015ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் திகதிவரை அவரின் சாரதியான திஸாநாயக்க தனித்து 12400 மில்லியன் ரூபாவுக்கான காசோலைகளை பணமாக மாற்றியுள்ளார் என்று தரவுகள் காட்டுவதாக நிதிமோசடி தடுப்பு பொலிஸ் பிரிவு தரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top