Headlines
Admin-message

குமரன் பத்மநாதன் தொடர்பான வழக்கு எதிர்வரும் 30ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Published by tamilkurall on  | 



தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர்; குமரன் பத்மநாதனை கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்த உத்தரவிடுமாறு  தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் 30ம் திகதி வரை  ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளை, குமரன் பத்மநாதன் தொடர்பில் தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, சட்டமா அதிபர்  தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து குறித்த  வழக்கை இம் மாதம் 30ம் திகதிக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம்  ஒத்தி வைத்துள்ளது. 

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top