கைது செய்யப்பட்டவர்கள் ஆடிகாமம், களுத்துறை மற்றும் பேருவளை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் ஆமைகளையும் ஆடுகளையும் ஆடிகாமம் பிரதேசத்தில் இருந்து பேருவளைக்கு கொண்டு செல்லவிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்படும் போது சந்தேக நபர்கள் பொலிஸாருக்கு 30 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாக கொடுக்க முயற்சித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் நீண்டகாலமாக இந்த வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.




