Headlines
Admin-message

மனித உடலிற்கு தீங்கான மீன்கள் சந்தைகளில் விற்பனை

Published by tamilkurall on  | 


மனித உடலிற்கு தீங்கினை ஏற்படுத்தும் இறக்குமதி செய்யப்பட்ட மீன்கள் சந்தைகளில் விற்பனை செய்யப்படுகின்றன என பொதுச்சுகாதார வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நீர்கொழும்பு-சிலாபம் ஆகிய இடங்களிலேயே இவ்வாறான மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக பொதுச்சுகாதார வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் செனரல் பண்டார குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இவ்வகையான மீன்களில் ஈயம் இருப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வகை மீன்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு உள்ளூர் சந்தைகளில் விற்பனை செய்யப்படுவதாக அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்தோடு மக்கள் மீன்களை கொள்வனவு செய்யும் போது அதிக கவனத்துடன் இருக்குமாறும் பொதுச்சுகாதார வைத்திய அதிகாரிகள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top