குறித்த சம்பவம் நேற்றிரவு நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் கள்ளக் கணவனே இந்த செயலை செய்துள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
தீக்காயங்களுக்கு உள்ளான 33 வயதான பெண் வெலிகம - வலான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உடல் நிலை மோசமானதன் காரணமாக மாத்தறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
பெண் மீது தீவைத்த சந்தேகநபர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

