தகவல் அறியும் சட்டமூலம் தொடர்பில் இலங்கையின் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள சட்டவியாக்கியானத்தை தொடர்ந்தும் படித்து வருவதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த சட்டமூலத்தின் சில சரத்துக்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிக்கொள்ள பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்று அண்மையில் உயர்நீதிமன்றம் சபாநாயகருக்கு அறிவித்திருந்தது.
இந்தநிலையில் குறித்த வியாக்கியானத்தை கவனமாக படித்துவருவதாக ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
இதன்பின்னரே உயர்நீதிமன்றத்தின் அறிவிப்பு குறித்து பதில் கூறமுடியும் என்று விஜயதாஸ தெரிவித்துள்ளார்.

