தமிழீழ விடுதலைப்புலிகள் மீள ஒருங்கிணையும் அபாயம் நிலவி வரும் நிலையில்முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு நீக்கிக் கொள்ளப்பட்டமைஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷவைக் கொல்வதே தமிழீழ விடுதலைப்புலிகளின் பிரதான இலக்கு என்றும்அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையைத் திருப்திப்படுத்தும் நோக்கில் பயங்கரவாதத் தடைச்சட்டம்அரசால் நீக்கப்படவுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல்களை ஒத்திவைப்பது அரசின் கொள்கையாக மாற்றமடைந்துள்ளது என்றும் அவர்குற்றம்சுமத்தியுள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஊடகவியலாளர்களை அச்சுறுத்தி வருகின்றார் எனவும்,நாடாளுமன்றிலேயே அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் போவதாக அச்சுறுத்திவருகின்றார் எனவும் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மேலும்தெரிவித்துள்ளார்.

