காதல் என்ற பெயரில் ஆண்களிடம் கொள்ளையில் ஈடுபட்டுவரும் பெண் ஒருவர் தொடர்பானதகவல்களை தமக்கு வழங்குமாறு சுன்னாகம் பொலிஸார் பொது அறிவித்தல் ஒன்றைவிடுத்துள்ளனர்.
சுமார் 22 வயது மதிக்கத்தக்க சொந்த முகவரி அற்ற தேனுகா ரவீந்திரன் என்றகுறித்த பெண் யாழ்.மாவட்டத்தில் பல இடங்களில் காதல் என்ற பெயரில் ஏமாற்றிபணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துள்ளார்.
பின் யாழ்.மாவட்டத்தில் இருந்து வெளியேறி தலைமறைவான நிலையில்தற்போது கொழும்பு புறநகர் பகுதியில் நடமாடி வருவதாக அறியமுடிவதாக கூறிய பொலிஸார்,
இவர் தொடர்பான தகவல்கள் தெரிந்தால் 0212240323 என்ற தொலைபேசி ஊடாக தகவல்களைவழங்குமாறு பொலிஸார் கேட்டுள்ளனர்.
இதேவேளை இந்த திருட்டில் ஈடுபட்டார் எனக் கருதப்படும் குறித்த யுவதியின் புகைப்படத்தினையும் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

