14 வயதான மாணவி ஒருவரே இவ்வாறு கர்ப்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மாணவி தலைவலி மற்றும் தலைசுத்து ஏற்பட்டமையை அடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே அவர் கர்ப்பமாகியுள்ளமை தெரியவந்துள்ளது.
சம்பம் குறித்து வைத்தியசாலையின் ஊடாக பொகவந்தலாவை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதன்படி, அதே பகுதியைச் சேர்ந்த 27 வயதான ஒருவர் பொகவந்தலாவை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த மாணவிக்கும் இளைஞனுக்கும் இடையில் காதல் உறவு இருந்து வந்ததாக மாணவியினால் பொலிஸாருக்கு அளிக்கபட்ட வாக்குமுலத்தின் ஊடாக தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஹட்டன் நீதிமன்றத்தில் நாளை ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

