Headlines
Admin-message

மஹிந்தவின் இராணுவப் பாதுகாப்பு நீக்கம்

Published by tamilkurall on  | 


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு வழங்கப்பட்டு வந்த இராணுவப் பாதுகாப்பு இன்றைய தினத்துடன் நீக்கப்பட உள்ளது.

மஹிந்த ராஜபக்ஸவின் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த 102 இராணுவ உத்தியோகத்தர்களும் அந்தப் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய தினம் பிற்பகல் 2.00 மணிக்கு இராணுவத் தலைமையகத்திற்கு சமூகமளிக்குமாறு குறித்த இராணுவ உத்தியோகத்தர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புப் பேரவையினால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய மஹிந்தவின் பாதுகாப்பு இவ்வாறு நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மஹிந்தவின் பாதுகாப்பு நீக்கப்பட்டமை குறித்து பாதுகாப்பு அமைச்சு எவ்வித உத்தியோகபூர்வ தகவல்களையும் இதுவரையில் வெளியிடவில்லை, மஹிந்தவின் ஊடகப் பிரிவே இதனைக் குறிப்பிட்டுள்ளது.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top