2020ஆம் ஆண்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணிர் விக்ரமசிங்க ஆகியோரின் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியில் இருக்காது என ஜே.வி.பியின் சிரேஸ்ட உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஏற்கனவே அரசாங்கம் ஆட்டம் கண்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.
ஜே.வி.பி.யின் மேதினக் கூட்டம் கொழும்பு பி.ஆர்.சீ மைதானத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கலந்தகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து தம்மால் திருப்தி அடைய முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

