தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்டஇறுதி வரைபு வெளியிடப்பட்டு இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக இந்திய அரசிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவரான வைத்திய நிபுணர் பூ. லக்ஸ்மன் தலைமையில் பேரவையின் செயற்பாட்டுக்குழுஉறுப்பினர்கள் மற்றும் அரசியல் உப குழு உறுப்பினர்கள் அடங்கிய ஐவர் கொண்ட குழுஇன்று மதியம் 2.30 மணியளவில் யாழ் நகரில்உள்ள இந்திய துணைத் தூதுவராலயத்தின் துணை உயர்ஸ்தானிகர் ஏ.நடராஜனிடம் நேரடியாக கையளித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து பேரவை உறுப்பினர்களுக்கும், இந்திய துணைஉயர்ஸ்தானிகர் ஏ.நடராஜனுக்கும் இடையிலான ஒரு மிக முக்கிய சந்திப்பும் நடைபெற்றுள்ளது

