ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிசாந்த விக்கிரமசிங்க ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
நிசாந்த விக்கிரமசிங்க ஸ்ரீ லங்கா விமான நிறவனத்தில் தலைவராக பதவி வகித்த காலத்தில் அங்கு இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் விசாரணை செய்யவே அவர் அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த நிறுவனத்தை தனியாருடன் இணைந்து நடாத்தி செல்ல பங்குதாரர்களுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் நேற்றைய தினம் அழைப்பு விடுத்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஸ்ரீலங்கா விமான சேவை நிறுவனம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விற்பனை செய்யப்படமாட்டாது என ஜனாதிபதி உறுதியளித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது

