Headlines
Admin-message

காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு

Published by tamilkurall on  | 


மஸ்கெலியா - சாமிமலை - கவரவில தோட்ட 200 ஏக்கர் பிரிவைச் சேர்ந்த எஸ்.வினோதன் என்ற 15 வயது சிறுவன், சாமிமலை ஸ்காபுரோ ஆற்றில் இருந்து நேற்று (23) சடலமாக மீட்கப்படுள்ளார். 

பிரதேச மக்கள் மஸ்கெலியா பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுவனை காணவில்லை என கடந்த 22ஆம் திகதி உறவினர்களால் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. 

கொழும்பில் இருந்து தனது சித்தப்பாவின் வீட்டுக்கு கடந்த 20ஆம் திகதி விடுமுறையை களிப்பதற்காக சென்றிருந்தபோதே, குறித்த சிறுவன் காணாமல் போயுள்ளதாக அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த நிலையிலே குறித்த சிறுவன் நேற்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

இதனை நண்பர்களுடன் பகிரவும்.




    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

© 2016 tamilkurall All Rights Reserved.
back to top